கடந்த 5 ஆண்டுகளில் பாஜக அரசின் பணி காரணமாக 37 கோடி மக்களுக்கு வங்கி கணக்கு கிடைத்துள்ளது - பிரதமர் மோடி

கடந்த 5 ஆண்டுகளில் பாஜக அரசின் பணி காரணமாக 37 கோடி மக்களுக்கு வங்கி கணக்கு கிடைத்துள்ளது என பிரதமர் மோடி கூறினார்
கடந்த 5 ஆண்டுகளில் பாஜக அரசின் பணி காரணமாக 37 கோடி மக்களுக்கு வங்கி கணக்கு கிடைத்துள்ளது - பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி இன்று நாடாளுமன்றத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

புதிய இந்தியாவுக்கான தொலைநோக்கு திட்டங்களை தனது உரையில் குடியரசு தலைவர் விவரித்தார். காந்திஜியே நமது ஆட்சியின் உயிர்மூச்சு.

ஜனாதிபதி விவசாயம் மற்றும் உழவர் நலன் குறித்து விரிவாகப் பேசியுள்ளார். அதிக குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி) பல தசாப்தங்களாக நிலுவையில் உள்ளது. இந்த நீண்டகால கோரிக்கையை தீர்க்கும் பாக்கியம் எங்களுக்கு கிடைத்தது. பயிர் காப்பீடு மற்றும் நீர்ப்பாசனம் தொடர்பான திட்டங்களுக்கும் இது பொருந்தும்.

அரசியல் காரணமாக சில மாநிலங்கள் விவசாயிகளை பிரதமர்-கிசான் திட்டத்தின் மூலம் பயனடைய அனுமதிக்கவில்லை. நான் அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன், தயவுசெய்து உழவர் நலனில் எந்த அரசியலும் இருக்க வேண்டாம். இந்திய விவசாயிகளின் வளர்ச்சிக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்

பல ஆண்டுகளாக, வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்க தூரம் ஒரு காரணமாக அமைந்தது. இப்போது விஷயங்கள் மாறிவிட்டன. வடகிழக்கு வளர்ச்சி இயந்திரமாக மாறி வருகிறது.

பல துறைகளில் சிறந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய அமைச்சர்களும், அதிகாரிகளும் இப்பகுதிக்கு தவறாமல் வருகை தருகின்றனர்

பழைய வழிகளின்படி நாங்கள் பணியாற்றியிருந்தால்-ராம் ஜன்மபூமி பிரச்சினை தீர்க்கப்படாமல் இருந்திருக்கும். இந்தியா-வங்காள தேச ஒப்பந்தம் வந்து இருக்காது.

நிதிப் பற்றாக்குறையை நாங்கள் கட்டுக்குள் வைத்திருக்கிறோம். விலை உயர்வும் கண்காணிக்கப்பட்டு, பொருளாதாரம் ஸ்திரத்தன்மையாக உள்ளது. முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரிக்க வேண்டும், நாட்டின் பொருளாதாரம் பலப்படுத்தப்பட வேண்டும், இதற்காக நாங்கள் பல நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.

இந்திய மக்கள் ஐந்து ஆண்டுகளாக எங்களின் செயல்பாடுகளை பார்த்தார்கள். அவர்கள் மீண்டும் எங்களுக்கு வாய்ப்பளித்துள்ளார்கள். இதனால் நாங்கள் இன்னும் வேகமாக பணிகளை செய்கிறோம். இந்த அரசாங்கத்தின் வேகம் காரணமாக கடந்த ஐந்து ஆண்டுகளில் 37 கோடி மக்களுக்கு வங்கிக் கணக்கு கிடைத்தது, 11 கோடி மக்களுக்கு வீடுகளில் கழிப்பறை கிடைத்தது, 13 கோடி மக்களுக்கு எரிவாயு இணைப்பு கிடைத்தது, 2 கோடி மக்களுக்கு சொந்த வீடு கிடைத்தது என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com