

நகரி,
ஆந்திர மாநிலத்தில் மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது. நகரியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் நடிகையும், நகரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரோஜா, வாக்களித்தார்.
பின்னர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியே வந்த ரோஜா, தனது கை விரலில் வைக்கப்பட்ட மையை அனைவருக்கும் காண்பித்ததுடன், அனைத்து பொதுமக்களும் தங்களது வாக்குரிமையை விட்டுக்கொடுக்காமல் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.