உத்தரபிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்த 11 பேர் சாவு

உத்தரபிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்த 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்த 11 பேர் சாவு
Published on

அலிகார்,

உத்தரபிரதேச மாநிலம் அலிகார் அருகே கார்சியா பகுதியில் ஒரு வியாபாரி திருட்டுத்தனமாக நாட்டு சாராயம் காய்ச்சினார்.

அதை வாங்கிக்குடித்த 2 பேர் இறந்து விட்டதாக லோதா போலீஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இருவரும் சரக்கு வாகன டிரைவர்கள் ஆவர்.போலீசார் அங்கு சென்றபோது, கார்சியா மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் மேலும் 9 பேர் கள்ளச்சாராயம் குடித்து இறந்திருப்பது தெரிய வந்தது.

மயங்கிய நிலையில் கிடந்த சிலர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. இதனால் உயிரிழப்பு அதிகரிக்ககூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com