உத்தர பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 15,353 பேருக்கு கொரோனா பாதிப்பு

உத்தர பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 15,353 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 15,353 பேருக்கு கொரோனா பாதிப்பு
Published on

லக்னோ,

உத்தர பிரதேச மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 15,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் உத்தர பிரதேசத்தில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,11,622 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலம் முழுவதும் தற்போது 71,241 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக உத்தர பிரதேச மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அங்கு இதுவரை 85,15,296 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் இரவு ஊரடங்கினை நடைமுறைப்படுத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், ஏப்ரல் 30 வரை பள்ளிகள் மூடப்படுவதாகவும் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com