உத்தரபிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 26,847 பேருக்கு கொரோனா பாதிப்பு

உத்தரபிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 26,847 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அம்மாநிலத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரங்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, உத்தரபிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 26,847 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 14,80,315 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 45 ஆயிரத்து 736 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து ஒரேநாளில் 34 ஆயிரத்து 721 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், உத்தரபிரதேசத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 12 லட்சத்து 19 ஆயிரத்து 409 ஆக அதிகரித்துள்ளது.

உத்தரபிரதேசத்தில் கொரோனா தாக்குதலுக்கு இன்று ஒரேநாளில் 298 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், அம்மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 170 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com