

கொல்கத்தா,
மேற்குவங்க மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 670 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15,97,765 ஆக அதிகரித்துள்ளது.
மாநிலத்தில் இன்று மேலும் 14 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 19,215 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மேற்கு வங்காளத்தில் இன்று ஒரே நாளில் 764 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இதையடுத்து அங்கு இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,70,521 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மேற்கு வங்காளத்தில் தற்போது 8,029 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.