மோசடியில் ஈடுபட்ட வருமான வரி முன்னாள் கமிஷனர் மீது வழக்கு சி.பி.ஐ. அதிரடி நடவடிக்கை

மோசடியில் ஈடுபட்ட வருமான வரி முன்னாள் கமிஷனர் மீது வழக்கு செய்து, சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மோசடியில் ஈடுபட்ட வருமான வரி முன்னாள் கமிஷனர் மீது வழக்கு சி.பி.ஐ. அதிரடி நடவடிக்கை
Published on

புதுடெல்லி,

டெல்லி அருகே உள்ள நொய்டாவில் வருமான வரி (முறையீடு) கமிஷனராக பணியாற்றியவர் சஞ்சய் குமார் ஸ்ரீவத்சவா. இவர் கடந்த மாதம், 104 வருமான வரி முறையீடுகளுக்கு கடந்த டிசம்பர் மாத தேதியிட்டு உத்தரவுகளை வழங்கினார். இதன் மூலம் அவர் பெரிய தொகையை ஆதாயமாக பெற்றுள்ளார்.

இது தொடர்பாக புகார் எழுந்ததை தொடர்ந்து அவர் கடந்த மாதமே பணிநீக்கம் செய்யப்பட்டார். அத்துடன் டெல்லியில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ரூ.2.47 கோடி நகைகள், ரூ.16.44 லட்சம், ரூ.1.30 கோடி வங்கி வைப்புத்தொகை உள்ளிட்ட சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதைத்தொடர்ந்து சஞ்சய் குமார் ஸ்ரீவத்சவா உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. குற்ற சதி, மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com