ஐநா மனித உரிமைகள் பேரவை அமர்வில் பாகிஸ்தானுக்கு இந்தியா 10 ஆலோசனைகள்

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 43-வது அமர்வில் பாகிஸ்தானுக்கு இந்தியா 10 அம்ச ஆலோசனைகளை வழங்கி உள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

புதுடெல்லி

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 43-வது அமர்வில் ஜம்மு-காஷ்மீரில் மனித உரிமைகள் குறித்து பாகிஸ்தான் கவலைகளை எழுப்பிய பின்னர் பதிலளிக்கும் உரிமையை உறுதிப்படுத்திய இந்திய நிரந்தர தூதர் விமர்ஷ் ஆரியன், சர்வதேச அளவில் பாகிஸ்தான் வெறித்தனமான எதிர்விளைவுகளால் சர்வதேச சமூகத்தை தவறாக வழிநடத்த முடியாது என்று கூறினார்.

பாகிஸ்தானுக்கு 10 அம்ச ஆலோசனை பட்டியலை வழங்கிய இந்திய தூதர் ஆரியன் பயங்கரவாத நிதியுதவியை நிறுத்தி, நாட்டிலும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள பிராந்தியங்களிலும் செயல்படும் பயங்கரவாத முகாம்களை அகற்றுமாறு கேட்டுக் கொண்டார்.

பாகிஸ்தானுக்கு இந்தியா வழங்கிய 10 அம்ச ஆலோசனை அடங்கிய பட்டியல் வருமாறு:-

1. சட்டவிரோத மற்றும் கட்டாய ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தலைகீழ் புள்ளிவிவர மாற்றங்களை கொண்டுவாருங்கள்.

2.பயங்கரவாத அமைப்புக்கு நிதியுதவியை நிறுத்துங்கள் மற்றும் பாகிஸ்தான் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள பிராந்தியங்களில் செயல்படும் பயங்கரவாத முகாம்களை அகற்றவும்.

3. பாகிஸ்தான் தலைமையின் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளவர்கள் பயங்கரவாதிகளுக்கான பொது வாதத்தையும் ஆதரவையும் நிறுத்துங்கள்.

4.பாகிஸ்தானில் ஜனநாயகத்தின் ஒற்றுமையை உருவாக்க கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்ளுங்கள்.

5. கடவுள் நிந்தனை சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் சிறுபான்மையினரை துன்புறுத்துதல் மற்றும் தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்துங்கள்.

6. இந்து, சீக்கிய மற்றும் கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுமிகளின் கட்டாய மத மாற்றங்கள் மற்றும் திருமணங்களை முடிவுக்குக் கொண்டு வாருங்கள்.

7. சிந்து, பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்குவாவில் அரசியல் எதிர்ப்பாளர்களைக் கொல்வதையும் குறிவைப்பதையும் நிறுத்துங்கள்.

8. பாதுகாப்பு அமைப்புகளால் ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கட்டாயமாக காணாமல் போதல் மற்றும் சட்டவிரோதமாக கொல்லப்படுவதைத் தடுக்கவும்.

9. ஷியாக்கள், அஹ்மதியாக்கள், இஸ்மாய்லியா மற்றும் ஹசாரஸ், டென்த் ஆகியோருக்கு எதிரான மதத் துன்புறுத்தல்களை நிறுத்துங்கள்.

10. மற்ற நாடுகளில் தற்கொலை குண்டுவெடிப்பு உள்ளிட்ட பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக குழந்தைகளை சேர்ப்பதை நிறுத்துங்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com