

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
கொரோனா முதலாவது அலை தாக்கியபோது, நம்மிடம் போதிய மருத்துவ கட்டமைப்பு வசதிகள் இல்லை. ஆனால், தற்போது வென்டிலேட்டர், ஆக்சிஜன், மருந்துகள், என்-95 ரக முககவசங்கள் என எல்லாவற்றிலும் இந்தியா தன்னிறைவுடன் உள்ளது. பிரதமரின் வேண்டுகோள் மற்றும் முயற்சிகளால் நாடு முழுவதும் 1,500-க்கு மேற்பட்ட மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதனால் ஆக்சிஜன் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.