

புதுடெல்லி
அணு ஆயுதங்கள் குறித்து ஸ்வீடனைத் தளமாக கொண்ட ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம்(சிப்ரி) சமீபத்தில் வெளியிடுள்ள அறிக்கை உலகை மீண்டும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
சர்வதேச உறவுகள் மோசமடைந்து வரும் நிலையில், அணு ஆயுதக் குவிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது உலகளவில் 12,512 அணு ஆயுதங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, அவற்றில் 9,576 ஆயுதக் களஞ்சியங்களில் பயன்பாட்டிற்கு தயாராக உள்ளன.
அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் அமலுக்கு வந்த காலத்தில், உலகின் ஐந்து நாடுகள் அணு ஆயுதங்களைக் கொண்டதாகக் கருதப்பட்டன. இதில் ரஷியா, சீனா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவை அடங்கும். ஏனென்றால், 1967-க்கு முன்பே இந்த நாடுகள் அணு ஆயுதங்களைச் சோதனை செய்திருந்தன. இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. வட கொரியா கையெழுத்திட்டது ஆனால் 2003 இல் ஒப்பந்தத்தில் இருந்து விலகியது.
இந்த அறிக்கையின் படி சீனா தனது அணுசக்தியை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு தானியத்தையும் நம்பியிருக்கும் பாகிஸ்தானும் கூட இந்த விஷயத்தில் பின்தங்கவில்லை அதுவும் தேவைக்கு அதிகமான அணுஆயுதங்களை கொண்டு உள்ளது.
உலகில் உள்ள மொத்த 12,512 ஆயுதங்களில் ஓய்வுபெற்ற மற்றும் அகற்றப்படுவதற்கு காத்திருக்கும் அணுஆயுதங்கள் உட்பட, 3,844 ஏவுகணைகள் மற்றும் விமானங்களுடன் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக மதிப்பிடுகிறது.
திங்களன்று வெளியிடப்பட்ட ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவன அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
| உலக அணு ஆயுதங்கள் 2023 நாடுகள் பயன்படுத்தும் தருவாயில் சேமிப்பு 2023 2023 2022 2023 2022 2023 அமெரிக்கா 1 770 1 938 3708 3708 5428 5 244 ரஷியா 1 674 2 815 4477 4489 5977 5 889 இங்கிலாந்து 120 105 225 225 225 225 பிரான்ஸ் 280 10 290 290 290 290 சீனா 410 350 410 350 410 இந்தியா 164 160 164 160 164 பாகிஸ்தான் 170 165 170 165 170 வட கொரியா 30 25 30g 25 30g இஸ்ரேல் 90 90 90 90 90 மொத்தம் 3 844 5 732 9490 9576 710 12512 இந்தியா, அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, பாகிஸ்தான், வட கொரியா மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட ஒன்பது அணு ஆயுத நாடுகளும் தங்களது அணு ஆயுதங்களை தொடர்ந்து நவீனமயமாக்கி வருகின்றன. சீனா முழுவதும் இலக்குகளை அடையும் திறன் கொண்ட நீண்ட தூர ஆயுதங்களுக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகத் தோன்றுகிறது. 5,000 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கக்கூடிய அக்னி-வி போன்ற அக்னி தொடர் ஏவுகணைகளை பாதுகாப்பு அமைச்சகம் தொடர்ந்து மேம்படுத்துவது, அதன் தாக்கும் திறனை விரிவுபடுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது. இந்தியாவிடம் இப்போது 164 அணு ஆயுதங்கள் இருக்கிறது. இதற்கு முன் 160 ஆக இருந்தது. பாகிஸ்தானிடம் 2022இல் 165 அணு ஆயுதங்கள் இருந்த நிலையில், இப்போது அது 170ஆக அதிகரித்துள்ளது. சீனாவிடம் கடந்த ஆண்டு 350 ஆக இருந்த அணு ஆயுதங்கள் இப்போது 410ஆக அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் பார்க்கும் போது அமெரிக்கா மற்றும் ரஷியாவிடம் தான் அதிகப்படியாக அணு ஆயுதங்கள் உள்ளன. உலகளவில் உள்ள அணு ஆயுதங்களில் 90சதவீதம் இந்த இரு நாடுகளிடம் மட்டுமே இருக்கிறது. அமெரிக்காவிடம் இப்போது 3708 அணு ஆயுதங்கள் உள்ளன. அதேபோல ரஷியாவிடம் இப்போது 4489 அணு ஆயுதங்கள் உள்ளன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் அணு ஆயுதங்களை விரிவுபடுத்தி வருவதாகவும், ஏவுகணை வடிவில் புதிய வகை முறைகளை அறிமுகப்படுத்தி தொடர்ந்து உருவாக்கி வருவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளன. இந்தியா தனது அணுசக்தி விநியோக அமைப்புகளை, குறிப்பாக அக்னி தொடர் ஏவுகணைகளை ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. புதிய தலைமுறை அக்னி பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் அணுசக்தி திறன் கொண்ட ரபேல் போர் விமானங்களை வைத்திருப்பதன் மூலம் அதன் மூலோபாய தடுப்பு திறன்களில் இந்தியா நம்பிக்கையுடன் உள்ளது. அக்னி இந்தியாவில் பல வகையான அக்னி ஏவுகணைகள் உள்ளன. சிலவற்றின் பணிகளும் நடந்து வருகின்றன. இந்த மாதம் சோதனையில் வெற்றி பெற்ற அக்னி பிரைம், இரண்டாயிரம் கி.மீ. அக்னி ஒன்று 700-800 கி.மீ. அக்னி 2 - 2000 கிலோமீட்டர் அக்னி மூன்று 3 ஆயிரம் கிலோமீட்டர் அக்னி 4 3500- 4000 கி.மீ. அக்னி ஐந்து ஐயாயிரம் கிலோமீட்டர் தூரம் வரை சென்றுள்ளது. அக்னி 6 பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் இலக்கு எட்டு-பத்தாயிரம் கிமீ என மதிப்பிடப்பட்டுள்ளது. பிருத்வி: முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மூன்று பிருத்வி ஏவுகணைகள் நாட்டில் உள்ளன. அவை பிருத்வி-ஒன்று, இரண்டு மற்றும் மூன்று என அழைக்கப்படுகின்றன. மூன்றும் ஐந்து முதல் பத்து குவிண்டால் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டவை. குறுகிய தூர ஏவுகணைகளும் மிகவும் ஆபத்தானவை. தனுஷும் இந்த வகை ஏவுகணையாகும், இது 2000 ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது. பிரம்மோஸ்: இது உலகின் அதிவேக ஏவுகணை. இது அற்புதமான ஆற்றலைக் கொண்டுள்ளது. இது ஏழு வெவ்வேறு வகைகளில் உள்ளன. இதன் வேகம் காரணமாகவே இது சூப்பர்சோனிக் ஏவுகணை என அழைக்கப்படுகிறது. அதை எங்கிருந்தும் ஏவலாம். ராடார் அதை கண்டுபிடிக்க முடியாது. இது நமது முப்படைகளாலும் பயன்படுத்தக் கூடியது. இது அமெரிக்காவின் டாம் ஹாக்ஸை விட இரண்டு மடங்கு வேகமாக தாக்கும் திறன் கொண்டது. மிகக் குறைந்த உயரத்திலும் பறக்கக் கூடியது. பிரம்மோஸ்-2 தயாரிப்பில் இந்தியா ஈடுபட்டுள்ளது. இது அதிக பயர்பவரைக் கொண்டிருக்கும். Related StoriesNo stories found. Dailythanthi
www.dailythanthi.com
|