தினசரி கொரோனா பாதிப்பு 3,641 : சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் நேற்று முன்தினம் 3 ஆயிரத்து 824 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு சற்று குறைந்தது. 3 ஆயிரத்து 641 பேருக்கு தொற்று உறுதியானது.

இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்து 26 ஆயிரத்து 246 ஆக அதிகரித்தது.

24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து 1,800 பேர் குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 41 லட்சத்து 75 ஆயிரத்து 135 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று அதில் 1,830 அதிகரித்தது. சிகிச்சை பெறுவோர் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்தை (20,219) தாண்டியது.

கொரோனாவுக்கு நேற்று முன்தினம் 5 பேர் பலியானார்கள். நேற்று பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. மராட்டியத்தில் 3 பேர், டெல்லி, கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங் களில் தலா ஒருவர், கேரளாவில் விடுபட்ட 4 மரணங்கள் என 11 பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 892 ஆக அதிகரித்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com