உலக சுகாதாரத்தை இந்தியா எதிரொலிக்கிறது: பிரதமர் மோடி

ஆயிரக்கணக்கான சுகாதார கட்டமைப்புகள் இந்தியாவில் உள்ளன என்று பிரதமர் மோடி கூறினார்.
உலக சுகாதாரத்தை இந்தியா எதிரொலிக்கிறது: பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி,

உலக சுகாதார கூட்டமைப்பின் 78-வது அமர்வு ஜெனிவாவில் நடைபெற்றது. இதில், காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

உலக சுகாதாரத்தின் தொலைநோக்கு பார்வையை இந்தியா வலுவாக எதிரொலிக்கிறது.; உலக சுகாதார சபையின் கருப்பொருள் 'ஆரோக்கியத்திற்கான ஒரு உலகம்' என்பதாகும். ஆரோக்கியமான உலகின் எதிர்காலம் தொலைநோக்கு மற்றும் ஒத்துழைப்பில் உள்ளது; ஆரோக்கியமான பூமியை உருவாக்குவோம்.

உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்துகிறோம். இது 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சையை வழங்குகிறது. ஆயிரக்கணக்கான சுகாதார கட்டமைப்புகள் இந்தியாவில் உள்ளன. தொலை மருத்துவம் மூலம், எவரும் ஒரு மருத்துவரிடம் இருந்து வெகு தொலைவில் இல்லை. எங்களுடைய கட்டணமில்லா தொலை மருத்துவச் சேவை 34 கோடிக்கும் அதிகமான ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

உலகளாவிய தென்பகுதி நாடுகள் குறிப்பாக சுகாதார சவால்களால் பாதிக்கப்படுகின்றன. இந்தியாவின் அணுகுமுறை அளவிடக்கூடிய மற்றும் நிலையான மாதிரிகளை வழங்குகிறது. எங்கள் கற்றல்களையும் சிறந்த நடைமுறைகளையும் உலகத்துடன், குறிப்பாக உலகளாவிய தென்பகுதி நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்.

ஜூன் மாதம், 11வது சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட உள்ளது. இந்த ஆண்டு, 'ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்திற்கு யோகா' என்ற கருப்பொருளை சர்வதேச யோகா தினம் கொண்டுள்ளது. உலகிற்கு யோகாவை வழங்கிய நாட்டிலிருந்து, அனைத்து நாடுகளையும் பங்கேற்க அழைக்கிறேன். வேதங்களிலிருந்து ஒரு பிரார்த்தனையுடன் நான் முடிக்கிறேன்.

அனைவரும் மகிழ்ச்சியாகவும், அனைவரும் ஆரோக்கியமாகவும் இருக்கட்டும். அனைவரும் நலம் விரும்பிகளாக இருப்போம், யாரும் துன்பப்படாமல் இருப்போம். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முனிவர்கள் அனைவரும் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், நோயின்றியும் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள். இந்த பார்வை உலகை ஒன்றிணைக்கட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com