இந்தியாவில் நேற்றை விட உயர்ந்த கொரோனா பாதிப்பு...!

இந்தியாவில் நேற்றை விட 15 சதவீதம் கொரோனா பாதிப்பு உயந்து, புதிதாக இன்று 10,197 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை அதிவேகமாக வீழ்ச்சிப்பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறது. தீபாவளி பண்டிகை முடிந்து 2 வாரங்களாகியும் புதிய தொற்று பாதிப்பில் கணிசமான ஏற்றம் இல்லாமல் இருந்து வந்தது. நேற்று முன்தினம் ஒரு நாள் பாதிப்பு 10 ஆயிரத்து 229 ஆக இருந்தது. நேற்று 8,865 பேருக்கு மட்டுமே தொற்று பாதிப்பு பதிவானது. (இதில் 5,516 பேர் கேரள மாநிலத்தினர் ஆவார்கள்).

இந்நிலையில் இந்தியாவில் இன்று மேலும் 10 ஆயிரத்து 197 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10 ஆயிரத்து 197 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,44,66,598 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 301 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,64,153 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் உயிரிழப்பு விகிதம் 1.35 % ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 12,134 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,38,73,890 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 98.28 % ஆக உள்ளது.

மேலும் கடந்த 527 நாட்களில் குறைவான பதிவாக கொரோனா தொற்றுக்கு தற்போது 1,28,555 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 113.68 கோடி பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 67,82,042 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 12,42,177 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 62,70,16,336 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com