இந்தியாவில் சற்று குறைந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 7,145 பேருக்கு தொற்று..!

இந்தியாவில் மேலும் 289 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் 2 நாள் ஏற்றத்துக்கு பின்னர் கொரோனா தினசரி பாதிப்பு நேற்று சற்றே குறைந்தது. நமது நாட்டில் கடந்த 2 நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. குறிப்பாக 14-ந் தேதி 5,784 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில் 15-ந் தேதி 6,984 பேருக்கும், 16-ந் தேதி (நேற்றுமுன்தினம்) 7,974 பேருக்கும், 17-ந் தேதி(நேற்று) 7,447 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.

இந்நிலையில் இன்று புதிதாக 7,145 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. ( இதில் கேரளாவில் மட்டும் 3,471 பேர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்).

இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7 ஆயிரத்து 145 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,47,33,194 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 289 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,77,158 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 8,706 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,41,71,471 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 98.38 % ஆக உள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு கடந்த 569 நாட்களில் குறைந்த அளவாக தற்போது 84,565 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,36,66,05,173 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 62,06,244 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 12,45,402 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 66,28,97,388 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com