புதிய ரக ஆகாஷ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை

மேம்படுத்தப்பட்ட புதிய ரக ஆகாஷ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.
புதிய ரக ஆகாஷ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை
Published on

இந்திய ராணுவத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில் பல்வேறு ஏவுகணைகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) அமைப்பு தயாரித்து வருகிறது. அந்த வகையில், புதிய ரக ஆகாஷ் ஏவுகணை

ஒடிஸாவின் சண்டீபூ கடற்கரைப் பகுதியில் பரிசோதிக்கப்பட்டது.

இந்த சோதனையின்போது செலுத்தப்பட்ட ஆகாஷ் ஏவுகணை தரையில் இருந்து வானில் உள்ள இலக்கைத் துல்லியமாக இடைமறித்து அழித்தது. அந்த ஏவுகணை அனைத்து பரிசோதனை இலக்குகளையும் சோதனையின்போது பூத்தி செய்தது. இந்த ஏவுகணையை தேவைப்படும் இடங்களுக்கு எளிதாக எடுத்துச் செல்ல முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com