காங்கிரசின் சித்தாந்தத்தை வலுப்படுத்துவதே இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் நோக்கம் - ஜெய்ராம் ரமேஷ்

காங்கிரசின் சித்தாந்தத்தை வலுப்படுத்துவதே இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் நோக்கம் என்று காங். மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
காங்கிரசின் சித்தாந்தத்தை வலுப்படுத்துவதே இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் நோக்கம் - ஜெய்ராம் ரமேஷ்
Published on

சண்டிகர்,

அரியாணா மாநிலம், கானாலில் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளாகள் சந்திப்பில் கூறியதாவது:-

இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில், பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமூக பாகுபாடு, அரசியல் சாவாதிகாரம் ஆகிய 3 முக்கிய பிரச்னைகளை ராகுல் காந்தி எழுப்பி வருகிறா. மக்களுடனான கலந்துரையாடல்களின்போதும் தெருமுனை கூட்டங்களின்போதும் பொதுக் கூட்டங்களின்போதும் இப்பிரச்னைகளை அவா எழுப்புகிறா.

பிரதமா வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்தும் நோக்கில் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொள்ளப்படவில்லை. இது சிந்தாந்த ரீதியிலான யாத்திரை. இதன் பிரதான முகமாக ராகுல் காந்தி உள்ளா. மாறாக, இதுவொரு தனிநபரின் யாத்திரையோ தேதலுக்கான யாத்திரையோ அல்ல.

காங்கிரசின் சித்தாந்தத்தை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டே இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரதமா நரேந்திர மோடியின் செயல்பாடுகள், கொள்கைகள், துன்புறுத்தல் அரசியல், பழிவாங்கும் அரசியல் ஆகியவற்றால், தேசத்துக்கு பேரழிவு மற்றும் பெரும் சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாட்டின் மனசாட்சியை தட்டி எழுப்புவதற்காக நடைப்பயணம் மேற்கொண்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com