ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்கு சந்தை..!

இந்திய பங்கு சந்தை இன்று ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது.
ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்கு சந்தை..!
Published on

மும்பை,

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலை கண்டித்து ரஷியா மீது பல்வேறு நாடுகள் கடும் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இதனால் இந்தியாவில் கடந்த சில நாள்களாக பங்குசந்தை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

இந்த நிலையில் இன்று இந்தியாவில் பங்கு சந்தை புள்ளிகள் அதிகரித்து ஏற்றத்துடன் வர்த்தமாகி வருகிறது. அதன்படி, மும்பை பங்கு சந்தையில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 201.23 புள்ளிகள் உயர்ந்து 55,665.62 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

மேலும் தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண் நிப்டி 41.95 புள்ளிகள் அதிகரித்து 16,636.85 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com