சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் இந்த நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.7 சதவீதமாக சரிவடையும்

சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியாவில் இந்த நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.7 சதவீதமாக சரிவடையும் என கணிக்கபட்டு உள்ளது உள்ளது.
சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் இந்த நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.7 சதவீதமாக சரிவடையும்
Published on

புதுடெல்லி

2019-20 ஆம் நிதியாண்டின் 4.2 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது மார்ச் 2021 உடன் முடிவடையும் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.7 சதவீதமாக சரிவடையக்கூடும் என்று மத்திய அரசின் புள்ளிவிவர அமைச்சகம் தெரிவித்துள்ளது.இது இந்திய ரிசர்வ் வங்கியின் 7.5 சதவீத வீழ்ச்சி கணிப்பை விட அதிகமாகும்.

2020-21 ஆம் நிதியாண்டிற்கான முன்கூட்டியே மதிப்பீடுகளை அரசாங்கம் வியாழக்கிழமை வெளியிட்டது. அதன்படி 2020-21 முழு ஆண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 7.7 சதவீதம் சர்வடையக்கூடும் என கணித்துள்ளது.

கடந்த 2019-20 ஆம் நிதியாண்டில் ஜிடிபி 4.2 சதவீத வளர்ச்சியுடன் இருந்தது. தேசிய புள்ளிவிவர அலுவலகம் இன்று வெளியிட்ட தேசிய வருமானத்தின் மேம்பட்ட மதிப்பீடுகளின்படி, இந்த நிதியாண்டில் விவசாயம் மற்றும் மின்சாரம் தவிர அனைத்து துறைகளிலும் சரிவு ஏற்பட்டு உள்ளது.

வர்த்தகம் மற்றும் ஓட்டல் துறையில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டு, அதன் சரிவு 21.4 சதவீதமாகவும், கட்டுமானம் மற்றும் உற்பத்தி துறை முறையே 12.6 சதவீதம் மற்றும் 9.4 சதவீதம் சரிவும் காணப்பட்டது. 2019-20 இல் 4 சதவீத வளர்ச்சி அடைந்த விவசாயத்துறை, இந்த நிதியாண்டில் 3.4 சதவீதம் ஆக வளரும் என மதிப்பிடப்பட்டது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சரிவு தற்போதைய கணிப்பின்படி இருந்தால், இது சுதந்திரத்திற்குப் பின்னர் ஏற்படும் மிகப்பெரிய சரிவாக இருக்கும் என்று புளூம்பெர்க் கூறி உள்ளது. கடைசியாக 1979-80 இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 5.24 சதவீதம் சரிவை கண்டது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலால் 2020 மார்ச் மாதம் நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக இந்தசரிவு ஏற்பட்டு உள்ளது என்று மத்திய அரசு கூறி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com