டெல்லி திகார் சிறையில் கைதிகள் மோதல்

டெல்லி திகார் சிறையில் கைதிகளுக்கு இடையே நடந்த மோதலை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
டெல்லி திகார் சிறையில் கைதிகள் மோதல்
Published on

புதுடெல்லி,

டெல்லி திகார் சிறையில் கைதிகள் சிலர் திடீரென ஆயுதங்களை கொண்டு ஒருவருக்கு ஒருவர் மோதி கொண்டனர். இந்த சம்பவத்தில் 2 பேர்

காயமடைந்துள்ளனர்.

திகார் சிறையில் 3வது பிரிவில் நடந்த மோதல் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோதலில் காயமடைந்த கைதிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிகிச்சை முடிந்து அவர்கள் மீண்டும் சிறைக்கு சென்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com