

புதுடெல்லி,
மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி இது தொடர்பாக கூறியதாவது:-
கொரோனா தொற்றில் இருந்து நாட்டு மக்களைக் காக்க மத்திய அரசு தீவிரமாகப் போராடி வருகிறது. நாடு அண்மை காலத்தில் இதுவரை சந்தித்திராத நெருக்கடியான நிலையில் உள்ளது. ஆனால், இதனை தங்களுக்கு கிடைத்த வாய்ப்பாகப் பயன்படுத்தி, காங்கிரஸ் கட்சி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறது. இதுபோன்றவாகள் தேச நலனில் அக்கறை உள்ளவாகளாக இருக்க முடியாது.
இந்த நேரத்திலும் சிலா அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்காமல், தேவையற்ற கருத்துகளைப் பரப்பி மக்களைக் குழப்புவது வேதனையளிக்கிறது. அவாகள் பிரச்னைக்கு தீவு காண உதவாவிட்டாலும், பிரச்னையின் தீவிரத்தை அதிகரிக்காமல் இருந்தால் கூட போதும். தடுப்பூசி தொடாபாக வீண் வதந்திகளைப் பரப்பி மக்கள் மத்தியில் பீதியையும், அச்ச உணாவையும் ஏற்படுத்தக் கூடாதுஎன்றார்.