உதய்பூரில் கன்னையா லால் படுகொலைக்கு பின் இணைய சேவைகள் மீண்டும் தொடக்கம்!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இணைய சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.
உதய்பூரில் கன்னையா லால் படுகொலைக்கு பின் இணைய சேவைகள் மீண்டும் தொடக்கம்!
Published on

உதய்பூர் ,

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ஜூன் 28 அன்று, தையல் தொழிலாளியான கன்னையா லால், முகமது ரியாஸ் அட்டாரி மற்றும் கவுஸ் முகமது ஆகியோரால் படுகொலை செய்யப்பட்டார்.

உதய்பூரில் தையல்காரர் கன்னையா லால் படுகொலை சம்பவத்தை தொடர்ந்து ராஜஸ்தான் முழுவதும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. குறிப்பாக உதய்பூரின் சில பகுதிகளில் போராட்டங்கள், வன்முறை சம்பவங்களும் அரங்கேறியது. இதனையடுத்து, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், உதய்பூர் இயல்பு நிலைக்கு மெல்ல திரும்பியுள்ளது. உதய்பூரில் நிலவும் பெரும் பதற்றத்திற்கு மத்தியில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஜெகன்நாதர் யாத்திரை அமைதியாக நடைபெற்றது.

இதனையடுத்து, ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், முடக்கப்பட்டிருந்த இணைய சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com