ஐதராபாத்தில் கட்டிடத்தில் இருந்து குதித்து ஐ.எப்.எஸ். அதிகாரி தற்கொலை

ஐதராபாத்தில் கட்டிடத்தில் இருந்து குதித்து ஐ.எப்.எஸ். அதிகாரி தற்கொலை செய்து கொண்டார்.
ஐதராபாத்தில் கட்டிடத்தில் இருந்து குதித்து ஐ.எப்.எஸ். அதிகாரி தற்கொலை
Published on

ஐதராபாத்,

ஆந்திர மாநில வனத்துறையில் ஐ.எப்.எஸ். அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் ரமணா மூர்த்தி (வயது59). இவர் ஐதராபாத் நகோலே பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று அதிகாலை திடீரென அந்த கட்டிடத்தின் 5-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது இந்த விபரீத முடிவுக்கான காரணம் தெரியவில்லை. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com