

புதுடெல்லி,
ராஜஸ்தான் முன்னாள் துணைமுதல்வர் சச்சின் பைலட் தனிக்கட்சி தொடங்குவதாக வெளியான செய்திக்கு காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலர் கேசி வேணுகோபால் தெரிவித்திருப்பதாவது, சச்சின் பைலட் தனிக்கட்சி தொடங்கவுள்ளதாக பரவும் தகவல் வதந்தி. ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலை காங்கிரஸ் கட்சி ஒற்றுமையுடன் எதிர்கொள்ளும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.