கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சுகாதார ஊழியர்கள் தனிமைப்படுத்தப்படும் காலத்தை பணிக்காலமாக கணக்கிட வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சுகாதார ஊழியர்கள் தனிமைப்படுத்தப்படும் காலத்தை பணிக்காலமாக கணக்கிட வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சுகாதார ஊழியர்கள் தனிமைப்படுத்தப்படும் காலத்தை பணிக்காலமாக கணக்கிட வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நாடு முழுவதும் டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்கள் கொரோனாவுக்கு எதிரான போரில் முன்நின்று களப்பணியாற்றி வருகின்றனர்.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சுகாதார ஊழியர்களும் வைரஸ் தொற்றுக்கு ஆளாவது தொடர்கதையாக உள்ளது. அப்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் சுகாதார ஊழியர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இந்த தனிமைப்படுத்தல் காலம் சுகாதாரப் பணியாளர்களுக்கு விடுப்பாக கணக்கிடப்பட்டு வருகிறது.

கொரோனா தொடர்பான வழக்குகள் விசாரணையின்போது சுப்ரீம் கோர்ட்டு இதனை பலமுறை சுட்டிக்காட்டி சுகாதார ஊழியர்களுக்கு பலன் தரும் முடிவை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தியது. அதன் பேரில் மத்திய அரசும் இது குறித்து தீவிரமாக பரிசீலித்து வந்தது.

இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சுகாதார ஊழியர்கள் தனிமைப்படுத்தப்படும் காலத்தை அவர்களின் பணிக்காலமாக கணக்கிடும்படி மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தலைமைச் செயலாளர்கள், அனைத்து எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் இயக்குனர்கள், மத்திய அரசு ஆஸ்பத்திரிகளில் இயக்குனர்கள் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com