கடவுள்தான் என்னை ஆட்சியில் இருந்து கீழே இறக்கியது: கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி

ராஜினாமா செய்த 17 எம்.எல்.ஏ.க்களும் எனது உயிரை காப்பாற்றினர். என்னை ஆட்சியில் இருந்து கீழே இறக்கியது கடவுள் தான் என்று குமாரசாமி கூறினார்.
கடவுள்தான் என்னை ஆட்சியில் இருந்து கீழே இறக்கியது: கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி
Published on

ரூ.10 ஆயிரம் கோடி

பெங்களூருவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் குமாரசாமி முன்னிலையில் ஜனதா தளம் (எஸ்) கட்சியில் சேர்ந்தனர்.

இதில் குமாரசாமி பேசியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளது. ஊரடங்கு காரணமாக பல்வேறு தரப்பு தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடி பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று நான் கூறினேன். ஆனால் அரசு இதை வழங்கவில்லை. 1 கோடி பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கினால் ரூ.10 ஆயிரம் கோடி தான் அரசுக்கு செலவாகும்.

கடவுளுக்கு நன்றி

இந்த ஆண்டு ஜி.எஸ்.டி. மூலம் கர்நாடகத்திற்கு ரூ.1.45 லட்சம் கோடி வருவாய் அரசுக்கு வந்துள்ளது. ஆனால் மக்களுக்கு உதவ அரசுக்கு மனமில்லை. இத்தகைய மோசமான அரசு நமது மாநிலத்தில் நடக்கிறது. என்னை ஆட்சி அதிகாரத்தில் இருந்து கீழே இறக்கியது கடவுள்தான். இதற்காக அந்த கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த 17 எம்.எல்.ஏ.க்கள் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை. அவர்கள் எனது உயிரை காப்பாற்றிய புண்ணியவான்கள் என்று நான் கருதுகிறேன். பா.ஜனதா அந்த 17 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சியை அமைத்தது. அந்த 17 பேருக்கும் மந்திரி பதவி வழங்கியுள்ளனர். இதை அரசு என்று அழைக்க முடியுமா?. மாநில கட்சியால் தான் மாநிலத்தின் உரிமைகள் காப்பாற்ற முடியும். வருகிற 2023-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் ஜனதா தளம் (எஸ்) கட்சியை மக்கள் ஆதரிக்க வேண்டும்.

எந்த பயனும் கிடையாது

அவ்வாறு செய்தால் கல்வி, வேலை வாய்ப்பு, சுகாதாரம், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன். தேசிய கட்சிகளால் கர்நாடகத்திற்கு எந்த பயனும் கிடையாது. டெல்லியில் இருந்து வருபவர்கள் சூட்கேஸ் வாங்கி கொண்டு சென்று விடுகிறார்கள். தமிழ்நாடு உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் மாநில கட்சிகள் தான் ஆட்சி செய்கின்றன. அங்கு மாநில கட்சிகள் சிறப்பான முறையில் ஆட்சி நடத்துகின்றன. இதை பார்த்து கர்நாடக மக்கள் மாநில கட்சியான ஜனதா தளம் (எஸ்) கட்சியை ஆதரிக்க வேண்டும்.

இவ்வாறு குமாரசாமி பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com