ஜார்க்கண்ட்: ரெயில் தண்டவாளத்தில் 4 பேரின் உடல்கள் கண்டெடுப்பு - போலீஸ் விசாரணை

ஒரு பெண், 2 குழந்தைகள் உள்பட 4 பேரின் உடல்கள் ரெயில்வே தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஜார்க்கண்ட்: ரெயில் தண்டவாளத்தில் 4 பேரின் உடல்கள் கண்டெடுப்பு - போலீஸ் விசாரணை
Published on

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில், தென்கிழக்கு ரெயில்வேயின் சக்ரதர்பூர் கோட்டத்தில் உள்ள கெண்டபோசி-தலாபுரு ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் ஒரு பெண், 2 குழந்தைகள் உள்பட 4 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்கள் 4 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும், கொலையாளிகள் அவர்களை வேறு இடத்தில் வைத்து கொலை செய்துவிட்டு உடல்களை தண்டவாளத்தில் வீசிச்சென்றிருக்கலாம் எனவும் ரெயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com