புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 26-ந்தேதி புறநோயாளிகள் பிரிவு இயங்காது என அறிவிப்பு

அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 26-ந்தேதி புறநோயாளிகள் பிரிவு இயங்காது என அறிவிப்பு
Published on

புதுச்சேரி,

மொஹரம் பண்டிகையை முன்னிட்டு, வரும் 26-ந்தேதி புறநோயாளிகள் பிரிவு இயங்காது என புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“மத்திய அரசு விடுமுறை தினமான 26.06.2026 (வெள்ளிக்கிழமை) அன்று மொஹரம் பண்டிகையை முன்னிட்டு ஜிப்மர் வெளிப்புற நோயாளி பிரிவுகள் இயங்காது. எனவே இந்த தேதியில் நோயாளிகள் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனினும் அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com