காஷ்மீரில் தாக்குதல் நடத்த திட்டம்: போலீசார் தேடுதல் வேட்டையில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் இருவர் கைது!

காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் இரண்டு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.
காஷ்மீரில் தாக்குதல் நடத்த திட்டம்: போலீசார் தேடுதல் வேட்டையில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் இருவர் கைது!
Published on

ஸ்ரீநகர்,

வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபோரில் புதன்கிழமை இரவு இரண்டு லஷ்கர்-இ-தொய்பா ஹைபிரிட் பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.

பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், பேட்டிங்கு கிராமத்தை முற்றுகையிட்டு தேடுதல் வேட்டை தொடங்கியது. அப்போது, இம்தியாஸ் அகமது கனாய் மற்றும் வசீம் அகமது லோன் ஆகிய 2 லஷ்கர் இடி பயங்கரவாதிகள் சோபூர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து கைத்துப்பாக்கிகள், சீன நாட்டு கையெறி குண்டுகள் மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட இரு பயங்கரவாதிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று போலீசார் தெரிவித்தனர்.

இருவரும் கலப்பு பயங்கரவாதிகளாகவும், லஷ்கரின் தரைப்படை தொழிலாளர்களாகவும் பணிபுரிவதாக விசாரணையில் தெரிவித்தனர். சோபோரில் வசிக்கும் பயங்கரவாதி பிலால் ஹம்சா மிரின் உத்தரவின் பேரில், அவர்கள் சோபோர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு வந்தனர்.

இந்த சோதனையின் போது, இருவரிடமிருந்தும் கைத்துப்பாக்கி, எட்டு தோட்டாக்கள், கையெறி குண்டுகள் போன்றவை மீட்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com