ஜம்முவில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு; 3 தீவிரவாதிகள் சுட்டு கொலை

ஜம்முவின் குப்வாரா மாவட்டத்திற்குள் ஊடுருவ முயன்ற 3 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
ஜம்முவில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு; 3 தீவிரவாதிகள் சுட்டு கொலை
Published on

ஜம்மு,

ஜம்முவின் குப்வாரா மாவட்டத்திற்குள் கெரான் பிரிவில் தீவிரவாதிகள் சிலர் ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து அவர்களை நோக்கி பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டனர்.

இந்த தாக்குதலில் 3 தீவிரவாதிகள் பலியாகினர். தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது என தகவல் தெரிவிக்கின்றது.

முஸ்லிம்கள் நோன்பு இருக்கும் ரமலான் மாதத்தில் பாதுகாப்பு படையினர் தீவிரவாத தேடுதல் வேட்டையில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எனினும், தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டால் அவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com