பீகார் சட்டசபை தேர்தலில் 12 தொகுதிகளை கேட்கிறது, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா

‘இந்தியா’ கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி எங்கள் கட்சி தலைவர் இறுதி முடிவு எடுப்பார் என்று ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் பொதுச்செயலாளர் கூறியுள்ளார்.
ராஞ்சி,
பீகார் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 11-ந் தேதிகளில் நடக்கிறது. இதையொட்டி, ‘இந்தியா’ கூட்டணியில் இணைந்து போட்டியிட ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா விரும்புகிறது.
இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் வினோத்குமார் பாண்டே கூறியதாவது:-
சமீபத்தில் பாட்னாவில் நடந்த கூட்டத்தில் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்களிடம் ஜார்கண்ட் எல்லையை ஒட்டி பழங்குடியினர் நிறைந்த 12 தொகுதிகளை ஒதுக்குமாறு கோரினோம். பேச்சுவார்த்தையின் முடிவை எங்கள் தலைவரும், முதல்-மந்திரியுமான ஹேமந்த் சோரனிடம் தெரிவித்தோம். எத்தனை தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவது என்று ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி அவர் இறுதி முடிவு எடுப்பார். தொகுதி பங்கீடு ஓரிரு நாளில் முடிவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story






