தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவராக நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா நியமனம்

கொல்கத்தை ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவராக நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா நியமனம்
Published on

புதுடெல்லி,

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவராக இருந்து சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல், கடந்த ஜூலை 6-ந்தேதி ஓய்வு பெற்றார். அதைத் தொடர்ந்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் பொறுப்பு தலைவராக நீதிபதி ஷியோ குமார் சிங் கடந்த ஜூலை 7-ந்தேதி நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவராக நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார். கொல்கத்தா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா, கடந்த மார்ச் 30-ந்தேதி ஓய்வு பெற்ற நிலையில், அவர் தற்போது தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com