பயிற்சியாளர் மீது கபடி வீராங்கனை பாலியல் புகார் - டெல்லி போலீஸ் விசாரணை

டெல்லியைச் சேர்ந்த 27 வயதான கபடி வீராங்கனை தன்னுடைய பயிற்சியாளர் மீது பாலியல் புகார் அளித்து உள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

டெல்லியைச் சேர்ந்த 27 வயதான கபடி வீராங்கனை தன்னுடைய பயிற்சியாளர் ஜோகிந்தர் மீது பாலியல் புகார் அளித்து உள்ளார். டெல்லி துவாரகாவில் உள்ள பாபா அரிதாஸ்நகர் போலீஸ் நிலையத்தில் இந்த புகார் அளிக்கப்பட்டது.

அதில் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்தே கபடி பயிற்சி பெற்றதாகவும், 2015-ம் ஆண்டு பயிற்சியாளர் தன்னை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துவிட்டதாகவும், அப்போது எடுக்கப்பட்ட படங்களை வெளியிடுவதாக கூறி மிரட்டியதாகவும் கூறியுள்ளார். இது மட்டுமின்றி 2018-ம் ஆண்டு தனக்கு கிடைத்த பரிசுத்தொகையில் ரூ.40 லட்சத்துக்கு மேல் வாங்கிக்கொண்டதாகவும் தெரிவித்து உள்ளார்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பாதிக்கப்பட்ட வீராங்கனையிடம் நேற்று வாக்குமூலம் பெறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட பயிற்சியாளர் தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே மல்யுத்த சம்மேளன தலைவர் மீது கூறப்பட்ட பாலியல் புகார் பரபரப்பான நிலையில் தற்போது வந்துள்ள இந்த புகார், விளையாட்டுத்துறையில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com