கர்நாடக தேர்தல்: பறிமுதல் செய்யப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை போலி அல்ல - தேர்தல் ஆணையம்

கர்நாடக தேர்தலில் ராஜ ராஜேஸ்வரி தொகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை போலி அல்ல என தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. #KarnatakaAssemblypolls2018
கர்நாடக தேர்தல்: பறிமுதல் செய்யப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை போலி அல்ல - தேர்தல் ஆணையம்
Published on

பெங்களூர்:

கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்காக கட்சிகள் தீவிரமாக கடைசி நாள் பிரச்சாரம் செய்ய களத்தில் இறங்கியுள்ளது.எல்லா கட்சியில் இருந்தும் முக்கியமான தலைவர்கள் அந்த மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கூடி பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

நேற்று முதல் நாள் இரவு ராஜ ராஜேஸ்வரி தொகுதியில் இருந்து கட்டு கட்டாக வாக்காளர் அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தமாக 10,000 வாக்காளர் அடையாள அட்டை நேற்று முதல்நாள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து 24 மணி நேர விசாரணைக்கு மாநில தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பித்து இருந்தார். அதன்படி ராஜ ராஜேஸ்வரி தொகுதியில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயிரக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டைகளில் எதுவுமே போலியானது கிடையாது என்று அறிவித்துள்ளார். எல்லா அடையாள அட்டையும் உண்மையானது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த அறையில் இருந்து எந்தவிதமான மோசடியும் செய்யப்படவில்லை, தேர்தல் ஆணையத்தின் இணையதளம் ஹேக் செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார்.

இந்த அடையாள அட்டை விவகாரத்திற்கு பின் காங்கிரஸ் இருக்கிறது என்று பாஜக குற்றச்சாட்டு வைத்துள்ளது. அந்த தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏதான் இந்த மோசடியை செய்து இருக்கிறார் என்று கூறியுள்ளது. அவரை கைது செய்து தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை வைத்து இருந்தது.

ஆனால் காங்கிரஸ் இதில் புதிய ஆதாரத்தை வெளியிட்டு உள்ளது. அதன்படி பாஜகவின் உறுப்பினர் மஞ்சுளா நஞ்சமரி என்பவர்தான் அந்த கட்டிடத்திற்கு உரிமையாளர் என்று கூறியுள்ளது. அவர்தான் இந்த மோசடிக்கு காரணகர்த்தா என்றும் காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறது. இதனால், அவரை கைது செய்து தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளது.

கடைசி நேரத்தில் பாஜக இதில் திடீர் என்று பல்டி அடித்தது. அதன்படி மஞ்சுளாவை யார் என்றே தெரியாது என்று பாஜக குறிப்பிட்டது. மஞ்சுளா எங்கள் கட்சியில் உறுப்பினர் இல்லை, எங்கள் கட்சியில் உள்ள யாருமே மஞ்சுளாவுடன் அரசியல் ரீதியாக தொடர்பில் இல்லை என்று கூறியது. காங்கிரஸ் தேவையில்லாமல் பழிபோடுகிறது என்றும் குற்றச்சாட்டு வைத்து இருந்தது.

தற்போது இதில் மஞ்சுளா மற்றும் அவரது மகன் ஸ்ரீதர் விளக்கம் அளித்துள்ளனர். அதன்படி, ''நாங்கள் இப்போதும் பாஜகவில்தான் இருக்கிறோம். எங்களுக்கு பாஜக கட்சியினர் எல்லோரிடத்திலும் நல்ல தொடர்பு இருக்கிறது. பாஜக உறுப்பினர்கள் ஏன் இப்படி எங்களை கைவிட்டார்கள் என்று தெரியவில்லை. பாஜக எங்களை கைவிட்டுவிட்டது.'' என்று வருத்தமாக கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com