கர்நாடக தேர்தல்: ஓபிஎஸ் அணி வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ஓ பன்னீர் செல்வம் அணியை சேர்ந்த 3 பேரின் வேட்பு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது.
கர்நாடக தேர்தல்: ஓபிஎஸ் அணி வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி
Published on

பெங்களூரு,

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அதிமுக போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். புலிகேசி நகரில் அதிமுக வேட்பாளர் அன்பரசன் அதிமுக வேட்பாளாக அறிவிக்கப்பட்டார். அதேபோல், முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வமும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவதாக அறிவித்தார்.

அதன்படி புலிகேசி நகர், கோலார், காந்திநகர் உள்ளிட்ட தொகுதிகளில் வேட்பாளர்களை ஓ பன்னீர் செல்வம் அறிவித்து இருந்தார். இந்த நிலையில் ஓ பன்னீர் செல்வம் அணியின் வேட்பாளர்கள் மூன்று பேரின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளர் அன்பரசனின் வேட்பு மனு புலிகேசிநகரில் ஏற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com