கர்நாடகாவில் புதிதாக 216 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கர்நாடகாவில் புதிதாக 216 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் புதிதாக 216 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

பெங்களூரு,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து உள்ளது. நாட்டில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. எனினும், பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. பொதுமக்கள் தங்களை காத்து கொள்ள ஊரடங்கு விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது. கர்நாடகா மாநிலத்திலும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதுவரை அங்கு 3 முறை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது நான்காவது முறை ஊரடங்காக இன்று (ஞாயிற்றுக் கிழமை) ஒரு நாள் முழு ஊரடங்கும், வரும் 31ம் தேதி வரை தொடர் ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கர்நாடகாவில் இன்று புதிதாக 216 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,959 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 608 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com