கர்நாடகாவில் இன்று மேலும் 3,222 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கர்நாடகாவில் இன்று மேலும் 3,222 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இன்று மேலும் 3,222 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

பெஙகளூரு,

கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலைபாதிப்பால் நாள்தோறும் பாதிப்பும், உயிரிழப்பும் புதிய உச்சத்தை தொட்டு அதிகரித்து வந்தது. இதையடுத்து கொரோனா பரவலின் சங்கிலியை உடைக்க கர்நாடக அரசு ஊரடங்கை அமல்படுத்தியது. இதன் பலனாக தற்போது மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

இந்நிலையில், கர்நாடகாவில் இன்று மேலும் 3,222 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,40,428 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு மேலும் 939 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34,929 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 14,724 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27,19,479 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 85,997 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com