

ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் அனந்த்நாக் மாவட்டத்தில் காடிபுரா கிராமத்தில் நடந்த என்கவுண்ட்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர். இதுபற்றி காஷ்மீர் ஐ.ஜி. விஜய் குமார் கூறும்பொழுது, அவர்கள் உள்ளூர் பயங்கரவாதிகள் போல் உள்ளனர்.
பயங்கரவாதம் வளரவில்லை. பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. சுட்டு கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் ஆதில் அகமது பட் மற்றும் ஜாகீர் ஆமீன் ராவுத்தர் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.