காஷ்மீர் என்கவுண்ட்டர்; பயங்கரவாதி சுட்டு கொலை

காஷ்மீரின் சோபியானில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஒரு பயங்கரவாதியை சுட்டு கொன்றனர்.
காஷ்மீர் என்கவுண்ட்டர்; பயங்கரவாதி சுட்டு கொலை
Published on

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் ராவல்போரா என்ற பகுதியில் அவர்கள் கூட்டாக இணைந்து நேற்றிரவு தேடுதல் வேட்டையை நடத்தினர்.

இதில், பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் சிலர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு வீரர்களும் பதிலடி கொடுத்தனர். இந்த என்கவுண்ட்டரில், ஒரு பயங்கரவாதியை போலீசார் சுட்டு கொன்றனர். இதனை காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்து உள்ளனர். தொடர்ந்து கூட்டு நடவடிக்கை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com