காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: 2 பயங்கரவாதிகள் பலி

காஷ்மீரில் பாதுகாப்புபடை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சண்டையில் 2 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: 2 பயங்கரவாதிகள் பலி
Published on

ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் லோலப் என்கிற இடத்தில் போலீஸ் சோதனை சாவடி உள்ளது. இங்கு நேற்று காலை மாநில போலீசாரும், பாதுகாப்புபடை வீரர்களும் கூட்டாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் 2 பேர் பாதுகாப்புபடை வீரர்களை குறிவைத்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். அதனை தொடர்ந்து போலீசாரும், பாதுகாப்புபடை வீரர்களும் தங்களுடைய துப்பாக்கிகளால் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்தனர்.

இரு தரப்புக்கும் கடுமையான துப்பாக்கி சண்டை நீடித்தது. இறுதியில் பயங்கரவாதிகள் 2 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com