கேரள நடிகை பாலியல் தொல்லை விவகாரம்: நடிகர் திலீப் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

அரசு தரப்பில் மேலும் 41 சாட்சிகளை விசாரிக்க கோரிய விவகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய நடிகர் திலீப்புக்கு உத்தரவிட்டது.
கேரள நடிகை பாலியல் தொல்லை விவகாரம்: நடிகர் திலீப் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Published on

புதுடெல்லி,

பிரபல கேரள நடிகையை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த மனுவை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு விசாரித்தது.

அப்போது கேரள நடிகையை கடத்தி, துன்புறுத்திய வழக்கில் அரசு தரப்பில் மேலும் 41 சாட்சிகளை விசாரிக்க வேண்டி உள்ளது என கேரள அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இது விசாரணையை தாமதப்படுத்தும் யுக்தி என நடிகர் திலீப் தரப்பில் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, கேரள நடிகையை கடத்தி, துன்புறுத்திய வழக்கில் அரசு தரப்பில் மேலும் 41 சாட்சிகளை விசாரிக்க கோரிய விவகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய நடிகர் திலீப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை வருகிற 17-ந் தேதிக்கு தள்ளிவைத்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com