கன்னியாஸ்திரி பாலாத்கார வழக்கில் கைதான பேராயர் பிராங்கோவுக்கு ஜாமீன்

கன்னியாஸ்திரி பாலாத்கார வழக்கில் கைதான பேராயர் பிராங்கோவுக்கு கோர்ட் ஜாமீன் வழங்கியுள்ளது.
கன்னியாஸ்திரி பாலாத்கார வழக்கில் கைதான பேராயர் பிராங்கோவுக்கு ஜாமீன்
Published on

திருவனந்தபுரம்,

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஜலந்தர் மறை மாவட்ட பேராயராக இருந்தவர் பிராங்கோ மூலக்கல். இவர் மீது கேரளாவின் கோட்டயம் மாவட்டம், குருவிளங்காடு கான்வென்ட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் பலாத்காரப் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக பிராங்கோ 3 நாள் விசாரணைக்குப் பிறகு கடந்த சில வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். பிராங்கோ தற்போது கோட்டயம் மாவட்டம் பலா கிளைச் சிறையில் நீதிமன்றக் காவலில் உள்ளார்.

இதற்கிடையில், தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி, பேராயர் பிராங்கோ, கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த கேரள ஐகோர்ட், பேராயர் மூலக்கல்லுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com