கேரளாவில் மேலும் 1,169 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கேரளாவில் மேலும் 1,169 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் மேலும் 1,169 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

திருவனந்தபுரம்,

கேரள சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கேரள மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,169 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 23,607 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது.

இன்று வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 43 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 95 பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களுக்கும் உறுதியாகி உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 14,467 நோயாளிகள் குணமடைந்த நிலையில் வைரஸ் பாதிக்கப்பட்டடு 11,342 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com