கேரளாவில் புதிதாக 25,772 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கேரளாவில் இன்று 25,772 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் புதிதாக 25,772 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

திருவனந்தபுரம்.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ள நிலையில் கேரள மாநிலத்தை மட்டும் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவின் தீவிரம் பெரிதும் குறையாமல் தொடரும் சூழலில் இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

அதன்படி, கேரளாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 19,688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 189 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 21,820 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் இன்று ஒரே நாளில் 27,320 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 39,93,877 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 2,37,045 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com