

திருவனந்தபுரம்
பிரதமர் மோடி குறித்து பேஸ்புக்கில் அவதூறு கருத்துகள் தெரிவித்த கேரளாவை சேர்ந்த பெண் போலீஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுப்புலா போலீஸ் நிலையத்தில் சைபர் கிரைம் பிரிவில் பணியாற்றி வந்த பெண் போலீஸ் அதிகாரி சஜிதா சலீம்.
இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு கருத்துகளை பகிர்ந்துள்ளார். மேலும், மத்திய பாஜக அரசுக்கு எதிரான கருத்துகளையும் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக இடுக்கி வடக்கு பாஜக இளைஞரணி தலைவர் தொடுப்புலா போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், பிரதமர் மோடிக்கு எதிராக பேஸ்புக்கில் அவதூறு கருத்துகளை சஜிதா சலீம் தெரிவித்தது உறுதியானது. இதையடுத்து சஜிதா சலீமை சஸ்பெண்ட் செய்து கிரைம் பிரிவு ஐஜி உத்தரவிட்டுள்ளார்.