கொல்கத்தா: ஓட்டலில் தீ விபத்து; 9 பேர் பலி

தீ விபத்தில் சிக்கி பலியானவர்கள் வங்காளதேச நாட்டினர் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.
கொல்கத்தா:  ஓட்டலில் தீ விபத்து; 9 பேர் பலி
Published on

கொல்கத்தா

கொல்கத்தாவில் உள்ள ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் பலியாகி உள்ளனர்.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள மிர்சா காலிப் தெருவில் உள்ள ஓட்டலில் இன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

9 பேர் பலி

இந்த தீ விபத்தில் சிக்கி ஒரு குழந்தை உட்பட 9 பேர் பலியாகி உள்ளனர். 6 பேர் காயமடைந்தனர். பலியானவர்கள் வங்காளதேச நாட்டினர் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது. வங்காளதேசத்தில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக அவர்கள் இந்தியாவுக்கு வந்துள்ளனர்.

அப்போது தீ விபத்தில் சிக்கி உயிரிழந்து உள்ளனர். புகையை சுவாசித்தபோது, அதன் பாதிப்பால் மயக்கமடைந்த பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த தீ விபத்துக்கான காரணம் என்னவென்று உடனடியாக தெரிய வரவில்லை. அதுபற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com