காஷ்மீர் குல்காம் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் - அதிர்ச்சி தகவல்!

பிரதமர் மோடி காஷ்மீர் செல்ல உள்ள நிலையில், நேற்று நடந்த சண்டை காரணமாக, காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் குல்காம் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் - அதிர்ச்சி தகவல்!
Published on

ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் மீர்ஹாமா பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து பயங்கரவாத தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று நடத்திய தேடுதல் வேட்டையில் , பதுங்கி இருந்த பயங்கரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.

இதனை தொடர்ந்து நடந்த என்கவுண்ட்டரில் மொத்தம் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். எனினும், தேடுதல் வேட்டை நீடித்து வருகிறது என காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் காஷ்மீர் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்று காஷ்மீர் போலீஸ் ஐ.ஜி தெரிவித்தார். மேலும், அவர்களிடம் இருந்து 2 ஏ.கே ரைபிள்கள், 7 ஏ.கே மெகசின்கள், 9 கையெறி குண்டுகள் உள்ளிட்ட குற்ற செயல் பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன என்றும் தெரிவித்தார்.

இன்று பிரதமர் மோடி காஷ்மீர் செல்ல உள்ள நிலையில், நேற்று நடந்த சண்டை காரணமாக, காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com