திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எல்.முருகன், நயினார் நாகேந்திரன் சாமி தரிசனம்

கோவிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம்
Published on

திருப்பதி,

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உலகப்புகழ் பெற்ற ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

சாமி தரிசனம்

இந்நிலையில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் இன்று ஏழுலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருடன் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள்சென்றிருந்தனர்.

அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், தீர்த்த பிரசாதங்களும் வழங்கப்பட்டன.

X

Daily Thanthi
www.dailythanthi.com