சுற்றுலாப்பயணிகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் விலங்குகள்: உமர் அப்துல்லா ஆவேசம்

ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சுற்றுலாப்பயணிகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் விலங்குகள்: உமர் அப்துல்லா ஆவேசம்
Published on

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரின் பகல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுற்றுலா பயணிகள் பலர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்த கொடிய தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உமர் அப்துல்லா இது தொடர்பாக கூறியிருப்பதாவது: " இந்த தாக்குதல் குறித்து தகவல் அறிந்ததும் அதிர்ச்சியடைந்தேன். தாக்குதல் நடத்தியவர்கள் விலங்குகள், மனிதாபிமானமற்றவர்கள் மற்றும் அவமதிப்புக்கு தகுதியானவர்கள். கண்டன வார்த்தைகள் போதாது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com