கேரள சட்டசபை தேர்தலில் இடதுசாரி கூட்டணி தோல்வி: முதல்-மந்திரி பினராயி விஜயன் ராஜினாமா

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி 91 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
கேரள சட்டசபை தேர்தலில் இடதுசாரி கூட்டணி தோல்வி:  முதல்-மந்திரி பினராயி விஜயன் ராஜினாமா
Published on

கொச்சி

கேரளாவில் முதல்-மந்திரியாக பினராயி விஜயன் பதவி வகித்த நிலையில், மே 23-ந்தேதியுடன் கேரள சட்டசபைக்கான பதவிக்காலம் முடிவடைகிறது. இந்த சூழலில், 140 தொகுதிகளை கொண்ட கேரள சட்டசபைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 9-ந்தேதி ஒரே கட்டத்தில், பலத்த பாதுகாப்புடன், வன்முறை எதுவுமின்றி நடத்தி முடிக்கப்பட்டது.

அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி தொடங்கி நடந்தது. மொத்தம் 71 தொகுதிகளில் பெரும்பான்மை பெற வேண்டிய நிலையில், காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவிக்கின்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 26 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

ஒட்டுமொத்தத்தில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி, 91 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. கடந்த முறை நடந்த தேர்தலை விட கூடுதல் தொகுதிகளில் (51) இந்த கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. இதனால், காங்கிரஸ் கட்சி ஆட்சியமைப்பதற்கான சாத்தியம் அதிகரித்து உள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணி 34 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. கடந்த தேர்தலை விட இந்த முறை 58 இடங்களில் இந்த கூட்டணி பின்னடைவை சந்தித்து உள்ளது. பா.ஜ.க. கூட்டணி 2 இடங்களில் முன்னிலையும், மற்ற கட்சிகள் 13 இடங்களில் முன்னிலையும் பெற்றுள்ளன.

கேரள சட்டசபை தேர்தலில் இடதுசாரி கூட்டணி தோல்வி அடைந்துள்ளது. இதனால், முதல்-மந்திரி பினராயி விஜயன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் கட்சி 91-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றுள்ளது. அக்கட்சி கேரளாவில் ஆட்சியமைக்க உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com