பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க ஆகஸ்ட் 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு

பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க ஆகஸ்ட் 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு
Published on

வருமான கணக்கு தாக்கலுக்கு பான் எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

இதுவரை நிறைய பேர் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்காத நிலையில் அதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமான வரி தாக்கலுக்கான கெடு ஆகஸ்டு 5ந்தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில் பான் எண்ணுக்கான அவகாசமும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் பான் அட்டைகள் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com